Sunday, August 2, 2009

கதையை நான் சொல்றேன்...!

ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.

மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...

JJJJJ

ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு ‘கட்’ அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளை உன் அப்பாவைக் கூப்பிட்டு வா...

மாணவன்: அவர் படம் பார்க்கலே சார்... கதையை நான் சொல்றேன்...

JJJJJ

ஆசிரியர்: எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற ஒரு பையன் நேற்று ஒரு கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லி விட்டான்...

மாணவன்: என்ன கேட்டீங்க...?

ஆசிரியர்: ஆந்தைக்கு பகல்ல கண் தெரியுமான்னு கேட்டேன். தெரியாது...ன்னுட்டான்.

JJJJJ

ஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்...

மாணவன்: என் உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து எழுதினேன் சார்...

JJJJJ

ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்...

மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்...

வாத்து, வாத்தி..!

டேனி ; சின்னா.. நீ சொல்லு... திருவள்ளுவர் இன்று உயிரோடு
இருந்தால் மக்கள் அவரைப்பற்றி என்ன சொல்லுவார்கள்..?

சின்னா ; உலகிலேயே அதிக வயதாகியும் உயிரோடு இருக்கும்
கின்னஸ் சாதனையாளர்ன்னு சொல்லுவாங்க சார்..!
_________________

டேனி ; டேய் சின்னா.. "கஞ்சன்" என்கிற பெயரில் கட்டுரை
எழுதச் சொன்னேனே.. ஏன் இன்னும் எழுதலை..?

சின்னா ; பேனாவில் இருக்கும் இங்கை செலவழிக்க விரும்பலை
ஐயா..!
_________________


டேனி ; சின்னா.. ஏன் அழுகிறாய்..?

சின்னா ; அப்பா அம்மாவைக் கழுதைன்னு திட்டினார்..
பதிலுக்கு அம்மா குரங்குன்னு ஏசினாங்க..

டேனி ; சரி.. அதுக்கு நீ ஏன் அழறே..?

சின்னா ; அப்போ நான் யாரு சார்..?
_________________

மாமா ; டேய் சின்னா.. உங்க பள்ளி ஸ்டேட் போர்டா..
செண்ட்ரல் போர்டா..?

சின்னா ; எல்லாமே பிளாக் போர்டுதான் மாமா..!
_________________

டேனி ; சின்னா.. முட்டை போடும் இரண்டு உயிரினங்கள் என்னென்ன..?

சின்னா ; வாத்து, வாத்தி..!
_________________

நான் ஒரு வித்தைக்காரன்..!

ஒரு வித்தைக்காரன் அன்று நிகழவிருக்கும் தன்னுடைய நிகழ்ச்சிக்காக காரில் சென்றுகொண்டிருந்தான். காவலர் வழிமறித்து, காரில் கிடக்கும் கத்திகளைப் பார்த்து கேள்வி எழுப்பினார். .

"நான் ஒரு வித்தைக்காரன்.. ஒரே நேரத்தில் 4 கத்திகளை தூக்கிப்போட்டு மாற்றி மாற்றி பிடிப்பேன்..!"

நம்பிக்கை வராத காவலர் சொன்னார்...

"எங்கே.. இப்போ செய்து காட்டு ... பார்க்கலாம்..!"

வித்தைக்காரன் காரை விட்டு இறங்கி கத்திகளைத் தூக்கிப் போட்டு பிடித்துக் காட்டினான்.. அப்போது சின்னாவும், அப்பாவும் காரில் அவ்வழியே சென்றனர்.. வித்தைக்காரனின் விளையாட்டைப் பார்த்த சின்னா, அப்பாவிடம் சொன்னான்..

" அப்பா.. நல்லவேளை.. இன்னிக்கு நீங்க மது அருந்தவில்லை.. இப்போவெல்லாம், போலீஸ் மூச்சுக்கருவி வச்சு குடிகாரனை கண்டுபிடிக்கறதில்ல போல இருக்கு.. அங்க பாருங்க.. ஒரு அங்கிள் என்ன பாடு படறார்ன்னு..!"

கோழித் தொல்லை ..!

சின்னா வீட்டில் அழகான தோட்டம் இருந்தது. சின்னாவுக்கும், பூச்செடிகள் என்றால் ஆசை. நண்பர்களிடம் வாங்கிவந்து புதுப் புது செடிகள் நடுவான். ஆனால் பக்கத்து வீட்டு கோழிகள் வந்து எல்லாவற்றையும் கிளறி குட்டிச்சுவராக்கிவிடும். விதைகள் நட்டாலும், சீய்த்துப் போட்டுவிடும்.

பக்கத்து வீட்டுக்காரரோ, தங்கள் கோழிகளை கட்டுப்படுத்துவதாக இல்லை. புகார் கூறினாலும் கண்டுகொள்வதே இல்லை.

கொஞ்ச நாள் போயிற்று. ஒருநாள் சின்னாவின் நண்பன் வந்தான். தோட்டம் வெகு நேர்த்தியாக இருந்ததைப் பார்த்து அதிசயித்துக் கேட்டான்... " கோழிகள் வர்றதில்லியா..?"

இல்லடா..!

"எப்படிடா..?"

சின்னா புன்முறுவலுடன் சொன்னான்..

" ஒரு 6 கோழிமுட்டை வாங்கி வந்து தோட்டத்துல அங்கங்க மறைச்சு வச்சேன்.. பக்கத்துவீட்டுக்காரன் பார்வையில் படுறமாதிரி, ஒவ்வொண்ணா எடுத்து திருட்டுத்தனமா கொண்டு போவேன்.. அவ்வளவுதான்.. கோழித் தொல்லை முடிவுக்கு வந்துடுச்சு..!"

சாமிகிட்டயே அனுப்பிடட்டுமா..?

சின்னா ஒரு நாய்க்குட்டி வளர்த்தான்.. ஒருநாள் நாய்க்குட்டியை தூக்கிக்கிட்டு, அழுதுட்டே அம்மாட்ட வந்தான்..

"அம்மா.. நாய்க்குட்டி செத்து போயிடுச்சும்மா..!"

அம்மா சமாதானப்படுத்தினாங்க..

"சின்னா.. நாய்க்குட்டி சாமிகிட்ட போயிடுச்சுப்பா.. அழாதே.. அதை நம்ம தோட்டத்திலேயே அடக்கம் பண்ணி, ஒரு ரோஜாச் செடி நட்டிடலாம். அப்படியே ஈவினிங் கடைக்குப் போய், உனக்கு விளையாட ஒரு கம்ப்யூட்டர் கேம் வாங்கிடலாம்.. ஓக்கேவா..?"

சின்னா கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கேட்டான்.. " கேம்ஸா...? தேங்க்யூம்மா..!"

இப்போது நாய்க்குட்டி லேசாக அசையவே, அம்மா சந்தோஷத்துடன் கூவினாள்..

"டேய் சின்னா.. அங்கே பார்.. நாய்க் குட்டி உயிரோட இருக்கு..!"

சின்னா சிந்தனையுடன் கேட்டான்...

" வேணும்ன்னா, அதை சாமிகிட்டயே அனுப்பிடட்டுமாம்மா..?"
___________________________________________________________________________

Saturday, July 5, 2008

சின்னா சொன்னான்..II

ஒருநாள் டேனியல் பிள்ளைகளைக் கேட்டார்..

குழந்தைகளே அண்மையில் நீங்கள் கேள்விப்பட்ட அதிர்ச்சிகரமான 
செய்தி என்ன..?

ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொன்னார்கள்.. சின்னாவின் முறை 
வந்ததும்.....

ரெண்டு நாளைக்கு முந்தி எங்க அப்பா கிணத்துல விழுந்துட்டாருய்யா..

அடடா.. இப்போது எப்படி இருக்கிறார்.. நல்லா இருக்காரா..?

அப்படித்தான் நெனைக்கிறேன்.. நேத்து சாயங்காலம் வரைக்கும் 
"காப்பாத்துங்க..காப்பாத்துங்க.."ன்னு கத்திகிட்டு இருந்தார்.. 
இப்போ சத்தத்தைக் காணோம்..!
_________________

சின்னாவின் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப் பட்டு வந்திருந்தன.

டேனி ; சின்னா எல்லா பாடத்திலும் சேர்த்து 57 மதிப்பெண்கள்.. 
வெட்கமா இல்லே..?

சின்னா ; அதை விடுங்க சார்.. உங்களை பயமுறுத்தறதுக்கு 
இதைச் சொல்லல.. அடுத்த தடவையும் மார்க் குறைஞ்சா அதுக்கு 
காரணமான ஆளை சும்மா விடமாட்டேன்னு எங்க அப்பா சொன்னார்.. 
உங்களை நெனச்சா பரிதாபமா இருக்கு..!
_________________

ஒருநாள் பள்ளிக் கூடத்துக்கு லேட் ஆயிருச்சின்னு சின்னாவோட அப்பா 
"நோ எண்ட்ரி" யில புகுந்து வந்தார்.. அப்போ சின்னாகிட்ட சொன்னார்..

என்ன இருந்தாலும் சட்டத்தை மீறியது மனசுக்கு கஷ்டமா இருக்கு சின்னா..

சின்னா அவரைத் தேற்றினான்..

கவலைப் படாதீங்க அப்பா.. ! ஒரு போலீஸ் வண்டியும் நோ எண்ட்ரியில 
புகுந்து நம்ம பின்னாடி வந்துகிட்டு இருக்கு..!
_________________

ஒருநாள் டேனி சின்னாவைக் கேட்டார்..

உலகம் உருண்டைன்னு எப்படி நிரூபிப்பாய்..?

என்னால் முடியாது அய்யா.. மேலும் பூமி உருண்டைன்னு 
யார்கிட்டயும் நான் சொல்லிக்கிட்டு திரியல..!
_________________

சின்னாவின் பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது 
ஒலிபெருக்கியில் ஒரு அறிவிப்பு..

பள்ளியின் வடக்கு பகுதியில் சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதால் 
அங்கு மிதிவண்டிகளை வைத்திருக்கும் மாணவர்கள் அவற்றை 
அப்புறப்படுத்தக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.. இதற்காக 15 நிமிடம் 
அவர்களுக்கு அவகாசம் வழங்கப் படுகிறது..

15 நிமிடம் கழித்து இன்னொரு அறிவிப்பு...

22 மிதிவண்டிகளை அப்புறப் படுத்தச் சென்ற 1500 மாணவர்களும் 
உடனடியாக வகுப்பறைகளுக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்...!
_________________

சின்னா சொன்னான்..I

சின்னா'வுக்கு ஒரு தங்கச்சி பாப்பா பொறந்துச்சு. அது ஓயாம ராவும் 
பகலும் அழுதுச்சு.. எரிச்சலுற்ற சின்னா கேட்டான்..

எங்கேருந்தும்மா இந்த பாப்பா வந்துச்சு..?

அம்மா திடுக்கிட்டாலும் பின் சமாளித்து சொன்னாள்.. 
"கடவுள் கொண்டுவந்து கொடுத்தாருப்பா..!"

சற்றும் தயங்காமல் சின்னா சொன்னான்..

"உடனே இந்த சனியனைகொண்டுபோய் அவர்கிட்ட விட்டுடு.. 
அவரால சமாளிக்க முடியாத குழந்தைகளை வச்சுக்கிட்டு 
கஷ்டப்பட நாமதானா கிடைச்சோம்..?
_________________

டெ.கு.டேனியல்  (teacher) ; கற்காலத்துக்கும் உலோக காலத்துக்கும் 
இடையில் இருந்தது என்ன காலம்..?

சின்னா ; எங்க கஷ்ட காலம் சார்.. ஒண்ணுமே நினைவுக்கு 
வரலியே..

_________________

டேனி ; யாருக்காச்சும் பனிக்கட்டியா உறையாத திரவம் எதுன்னு 
தெரியுமா?

சின்னா ; தெரியும் சார்.. கொதிக்கிற வென்னீர்..
_________________

டேனி ; பிள்ளைகளே.. எந்த மாதத்துக்கு 28 நாட்கள் உள்ளன 
சொல்லுங்கள் பார்ப்போம்..?

சின்னா ; எல்லா மாசத்திலும் 28 நாள் இருக்குய்யா..!

_________________


டேனி ; பிள்ளைகளே.. நான் உங்களை கடக ரேகைக்கு தெற்கே 
32 டிகிரியில் சந்திக்க நினைப்பதாக வைத்துக் கொள்வோம்.. 
அப்படியென்றால் நாம் எந்த ஊரில் சந்திப்போம்..?

சின்னா ; இப்படியெல்லாம் வில்லங்கமா கேள்வி கேட்டா 
ஒருத்தனையும் நீங்க சந்திக்க முடியாதுய்யா.. போய் நின்னு 
பார்த்துட்டு ஏமாந்து போய் திரும்ப வேண்டியதுதான்..!
_________________

சின்னாவின் தந்தை கோட் சூட் அணிந்து அலுவலக பார்ட்டிக்கு 
கிளம்புவதை கவலையோட பார்த்துகிட்டுருந்தான்.. அப்பா கேட்டார்..

ஏண்டா சின்னா அப்படி பார்க்கிறே..?

இல்லப்பா வரும்போது இதையெல்லாம் கழட்டிட்டு வாங்களேன்..

ஹா..ஹா.. எதுக்கு அப்படி சொல்றே..?

இல்லப்பா.. இப்படி ட்ரெஸ் போட்டுட்டு போகும்போது நல்லா 
போறீங்க.. ஆனா வரும்போது அடுத்த வீட்டுக் கதவை தட்டுறீங்களா..? 
அந்த ஆண்டி "எருமை மாடு வந்துடிச்சு.. தண்ணியை குடிச்சுட்டு" 
அப்படின்னு திட்டுறாங்கப்பா.. இந்த ட்ரெஸ் உங்களுக்கு ராசி இல்லே.. 
வரும்போது எருமை மாடா உங்களை ஆக்கிடுது..!
_________________